×

ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஊட்டி: ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நாளை (10.05.2024) தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கோடை சீசனையொட்டி 126-வது மலர் கண்காட்சி நாளை (10.05.2024) தொடங்கி 20-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஊட்டி ரோஜா பூங்காவில் நாளை ரோஜா கண்காட்சியும் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மலர் கண்காட்சியையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; நீலகிரி மாவட்டத்தில் நாளை (10.05.2024) 126-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேற்கண்ட விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற 18-ம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு பணி நாளாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஊட்டியில் 126-வது மலர் கண்காட்சி நடைபெறுவதையொட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : exhibition ,Ooty ,126th Flower Fair ,126th Summer Flower Show ,Ooty Govt Botanic Garden ,Nilgiris District ,126th Flower Show ,Dinakaran ,
× RELATED சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால்...